Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்

October 1, 2021
in News, World
0
அமெரிக்காவில் அதிகரிக்கும், குழந்தை திருமணங்கள்

அமெரிக்காவில் கோவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி ஒரே நாளில் 2190 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கோவிட் – 19 தொற்று அதிகரித்து வருகிறது. 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 276 பேருக்கு புதிதாக கோவிட் – 19 தொற்றியுள்ளது.

அத்துடன் 2 ஆயிரத்து 190 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி மாத்திரம் கோவிட் காரணமாக 1946 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் கோவிட் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா வைரஸ் காரணமாகவே கடந்த சில மாதங்களாக கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது.

அதேவேளை அமெரிக்காவில் மீண்டும் கோவிட் மரணங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் வைரஸ் எளிதாக தொற்றக் கூடிய 65 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நாட்டின் பொது சுகாதார தேவைகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்க தொற்று நோய் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மூன்றாவது தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் அமெரிக்கா தனது நாட்டு மக்களின் 75 வீதமானோருக்கு கோவிட் தடுப்பூசியை செலுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமெரிக்காவில் முதலாது கோவிட் அலையின் போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் அங்கு கோவிட் மரணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது விசேட சுற்றுநிரூபம்

Next Post

இலங்கையில் இரு வாரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?

Next Post
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

இலங்கையில் இரு வாரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures