Saturday, May 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு

September 27, 2021
in News, மகளீர் பக்கம்
0
சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முகநூலைத் தவறாக பயன்படுத்தும் நபர்களை ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களோடு tnpolice.gov.in என்ற தமிழக காவல் துறையின் இணையதளம் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வழியாக நடைபெறும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஒருவருக்கு தெரியாமலேயே அவரது சமூகவலைத்தள கணக்கை தவறான வழிகளில் பயன்படுத்தும் செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் முகநூல் கணக்கிலும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே சமூக வலைத்தளங்களை பெண்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினர் கூறும் ஆலோசனைகள் இதோ…

தவறாக பயன்படுத்தப்படும் சூழல்

சமூக விரோதிகள் பலர் பெண்களின் பெயரில் போலியான கணக்கை உருவாக்கி பெண்களுக்கு நட்பு கோரிக்கை அனுப்பி இணைந்து கொள்கின்றனர். பிறகு அந்த பெண்ணை அவர்களுக்கு தெரியாமல் ஆபாச காட்சிகளை பகிரும் மெசெஞ்சர் குழுக்களில் இணைத்து அவர்களையே அக்குழுவுக்கு உரிமையாளராகவும், நிர்வாகியாகவும் மாற்றி விடுகின்றனர். பெண்கள் பகிரும் புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றை அப்படியே நகல் எடுத்து அவர்கள் பெயரிலேயே போலியாக ஒரு பக்கத்தை உருவாக்கிஅவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் பண உதவி கேட்டு ஏமாற்றுகின்றனர். மேலும் அந்த பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் கேட்டும் மிரட்டுகின்றனர்.

யாருக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும்?

எப்போதாவது ஒருமுறை முகநூலைப்பயன்படுத்துபவர்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. சமூக வலைத்தளங்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், ஒரு வசதி அறிமுகமாகும் போதே அதற்கான பாதுகாப்பு வசதிகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப புதுப்பித்து கொள்வார்கள். ஆனால் எப்போதாவது பயன்படுத்துபவர்கள் இவற்றை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பார்கள். எனவே பெண்கள் தங்களின் முகநூல் பக்கத்தை அந்நியர்கள் பயன்படுத்த முடியாதவாறு பாதுகாப்புடன் கையாள வேண்டும்.

தற்காத்துக்கொள்வது எப்படி?

நமக்கு தெரியாத அந்நிய நபர்களின் நட்பு கோரிக்கையை ஏற்கும் முன்பு, அவரின் பக்கத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.பெண்கள் பெயரிலிருந்தே நட்பு கோரிக்கை வந்தாலும் அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தால் தான் உண்மையிலேயே பெண்ணாக இருக்க முடியும். இம்மாதிரியான விஷயங்களை ஆராய்ந்த பிறகு அவரின் நட்பு கோரிக்கையை ஏற்க வேண்டும். எப்போதாவது ஒருமுறைதான் முகநூலை பயன்படுத்துபவர் என்றால் அவ்வப்போது வரும் புதுப்புது வசதிகளை ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

புகார் அளிப்பது எப்படி?

முகநூலைத் தவறாக பயன்படுத்தும் நபர்களை பற்றி அந்த நிறுவனத்திடமே புகார் அளிக்க முடியும். அவர்கள் குறிப்பிட்ட நபரின் பக்கத்தை ஆராய்ந்து தடை செய்து விடுவார்கள். அதையும் தாண்டி வேறு வகைகளில் தொடர்ந்து தவறாக பயன்படுத்தும் நபர்களை ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களோடு tnpolice.gov.in என்ற தமிழக காவல் துறையின் இணையதளம் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கிய மனித உடல்

Next Post

வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

Next Post
வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

Easy24News

கனடா – பிரித்தானியாவின் முடிவு – அச்சத்தில் நாமல்: ஆபத்தில் அநுர அரசு

May 17, 2025
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

May 17, 2025
தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

May 17, 2025
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 29 பாரிய போராட்டம்

May 17, 2025

Recent News

Easy24News

கனடா – பிரித்தானியாவின் முடிவு – அச்சத்தில் நாமல்: ஆபத்தில் அநுர அரசு

May 17, 2025
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

May 17, 2025
தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

May 17, 2025
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 29 பாரிய போராட்டம்

May 17, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures