தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழில் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பரபரப்பு காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் கஜேந்திரனை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை கூட கருத்தில் கொள்ளாது பொலிஸார் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனை தடுக்க முற்பட்ட பெண்களுடன் பொலிஸார் முறுகலிலும் ஈடுபட்டுள்ளமை அந்த காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது , அதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.
நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]