Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரபல தனியார் வங்கியின் பதவி உயர்வில் வடக்கு கிழக்கு உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு!

September 18, 2021
in News, Sri Lanka News
0
பிரபல தனியார் வங்கியின் பதவி உயர்வில் வடக்கு கிழக்கு உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு!

பிரபல தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி தரம் 1இல் பதவி உயர்வு வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

செலான் வங்கி நாடளாவிய ரீதியில் அதன் அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அதன் ஏனைய வங்கி பிரிவுகளுக்கும் ஒவ்வொரு வருடமும் நிறைவேற்று அதிகாரிகள் தரம் 1 பதவி நிலைக்கு அவ் வங்கியின் உத்தியோகத்தர்களை தரம் உயர்த்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு பல்வேறு காரணங்களால் காலம் தாழ்த்தப்பட்டு கடந்த 15/09/2021 அன்று அவ்வங்கியின் மனிதவள பிரிவினால் வெளியிடப்பட்டது. அதில் 89 உத்தியோகத்தர்களின் பெயர்கள் பதவியில் தரம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டது.

இப்பதவிக்கு வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பல உத்தியோகத்தர்கள் அவ்வங்கியினால் நடாத்தப்பட்டத பதவி உயர்விற்கான தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வடகிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இப்பதவிக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தனர். எனினும் வங்கி வெறும் கண் துடைப்பிற்காக வடக்கைச் சேர்ந்த ஒருவருக்கும் கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்குமே பதவியுயர்வு வழங்கியுள்ளது.

வங்கியின் இப்பாரபட்ச நடவடிக்கையானது வங்கியின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் வங்கியின் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அனைவர் மத்தியிலும் கொத்தளிப்பையும் மன விர்க்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.


http://Facebook page / easy 24 news

Previous Post

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக இறந்து கிடந்த இளைஞர்

Next Post

குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

Next Post
குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures