Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரோனாவுக்கு மற்றொரு வைத்தியரும் பலி: திருப்தியடைய முடியாது என்கிறது சுகாதார தரப்பு

September 17, 2021
in News, Sri Lanka News
0
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

நாட்டில் கடந்த ஒரு மாதத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் இது திருப்தியடையக் கூடிய நிலைமை அல்ல என்று சுகாதார தரப்பினரும் , மருத்துவ சங்கங்களும் தெரிவித்துள்ளன.

எனவே அடுத்த வாரத்தின் பின்னரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் மருத்துவ தரப்பின் கோரிக்கையாகவுள்ளது.

நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிக்சை பெற்று வந்த வைத்தியயொருவர் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த குறித்த வைத்தியர் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையிலேயே நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இந்நிலையில் இன்றையதினம் மாலை வரை 1382 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இது வரையில் 497 805 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 428 590 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 57 398 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 118 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 11 817 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 61 ஆண்களும் 57 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 95 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

அத்தோடு இலங்கையில் இதுவரையில் 13 649 253 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 10 814 200 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி கோழைகளைப் போன்று ஒளிந்திருந்தவரே லொஹான் – சரத் பொன்சேகா

Next Post

தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை

Next Post
இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது

தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures