Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நாவிலிருந்து வெளியேறுவதாக ஆணவத்துடன் அறிவித்தது அரசாங்கம் – மனோ கணேசன்

September 13, 2021
in News, Sri Lanka News
0
தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம்  :அமைச்சர் மனோ கணேசன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர்கள் தரப்பில் பல கடிதங்கள் அனுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இருக்கின்ற ஒற்றுமையை மேலும் குறைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டங்களின் போது மாத்திரம் தூக்கத்தில் இருந்து விளித்துக் கொள்ளாமல், அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைவரும் விழிப்புடன் இணைந்து பயணிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இது தொடர்பில் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் மேலும், எதிர்வரும் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் இடம்பெறும் மனித உரிமை கூட்டங்களில் மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் இலங்கையில் எதிர்நோக்கும் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தனது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கான செயற்பாடுகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக் காலத்தில், இலங்கை அரசும் ஒரு பங்காளியாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தன்னை திருத்திக் கொள்ளவும், கடந்தகால குற்றங்களுக்கு விடை தேடவும் இணக்கம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல விடயங்கள் இடம்பெற்றதாகவும், பல விடயங்கள் இடம்பெறவில்லை எனவும், எனினும் ஐக்கிய நாடுகள் சபையுடன் “தமிழர்களின் வழக்கு” நல்லாட்சியிலேயே ஆரம்பமானதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், அதிலிருந்து வெளியேறுவதாக ஆணவத்துடன் அறிவித்ததாகவும், அதையடுத்து, இவ்வருடம் மார்ச்சில் மனித உரிமைகள் பேரவை கூடி இலங்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது அமர்வைவிட, அடுத்த வருடம் இடம்பெறவுள்ள 49ஆவது மற்றும் 51ஆவது கூட்டங்கள் தமிழ்த் தரப்பிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் மிக முக்கியமானவை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

தேவர்மகன் 2ஆம் பாகத்தில் விக்ரம்?

Next Post

டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின் பறிபோகிறதா விராட் கோலியின் தலைமைப் பதவி?

Next Post
டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின் பறிபோகிறதா விராட் கோலியின் தலைமைப் பதவி?

டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின் பறிபோகிறதா விராட் கோலியின் தலைமைப் பதவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures