Saturday, May 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியவை

September 11, 2021
in Health, News
0
குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர். உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.

நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர்; அது விளையாடும் இடத்திலோ, 1 பள்ளியிலோ அல்லது வீட்டில் கூட இருக்கலாம். உங்களது குழந்தைகள் போகும் அனைத்து இடத்தையும் நீங்கள் கிருமிநீக்கம் செய்ய முடியாது, ஆதேபோல் உங்களது குழந்தைகள் வெளியே போய் விளையாடுவதையும் நீங்கள் தடுக்க முடியாது. அதனால், பெற்றோராக, நீங்கள் தொற்றுகள் மற்றும் ஒருசில நோய்களின் பாதிப்புகளை எவ்வாறு குறைக்க முடியும்? குழந்தைகள் இயற்கையாகவே பலமுள்ள நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்வது ஒரு முறையாகும். அதனால், உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.

மிதமான உடற்பயிற்சி செய்வது இயற்கையான செல் அழிவு முறையில் (நோய் பாதிப்பை எதிர்க்கும் புரதங்கள்) ஒரு நல்ல பலனை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 2 இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. 3 இவ்வாறு அவர்களது வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சியை தொடர்ந்து உங்களது குழந்தைகள் செய்யும்படி சொல்வது அவர்களது உடலை கட்டுறுதியாக வைத்திருப்பதோடு அவர்களது நோயெதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும். நீண்ட நேரம் மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகும்; அதேவேளை, தொடர்ந்து மிதமான கடினத்தன்மை கொண்ட உடற்பயிற்சியை செய்வது பலனளிக்கக்கூடியதாகும். அதனால் பெற்றோராக நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.

நோயெதிர்ப்புத் திறனில் ஊட்டச்சத்து ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் நோயெதிர்ப்புத்திறன்-குறைபாட்டுக்கு காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுதான் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் குறைபாடு நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு துத்தநாகம், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களும் முக்கியமானவையாகும். 5 இவற்றில் ஒரு ஊட்டச்சத்து குறைந்தாலும் அவை உடலின் நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும். ஆகையால், அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சமச்சீரான உணவைச் சாப்பிடுவது அதிலும் முக்கியமாக நோயெதிர்ப்புத் திறன் வளர்ச்சி அடைந்து வரும் சமயத்தில் அவ்வாறு செய்வது மிகவும் முக்கியமாகும்.

நோயெதிர்ப்பு சக்தி முறையாக செயல்படுவதற்கு உடலை சீரமைக்கும் மிகவும் முக்கியமான ஒரு செயல்முறை தூக்கமாகும். தூக்கம் குறைவது நோயெதிர்ப்புக் கட்டமைப்பை பலகீனமாக்கும் அத்துடன் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 6 உண்மையில், சரியான அளவு தூக்க நேரத்தைக் காட்டிலும் குறைவாக தூங்கினால் அதிகமாக சளி பிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 7 டி-செல்கள் மற்றும் வீக்கத்துடன் சம்மந்தமான சைட்டோகின்கள் இரவில் அதிகம் தோன்றும். 8 ஆகையால் உங்களது குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு தூங்கும் பழக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழச்செய்வது மிகவும் முக்கியமாகும்.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். அவர்கள் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்தது போல்தான் செய்வார்கள். பெற்றோர்களாக, அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையாக இருப்பது நம்முடைய பொறுப்பாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கூட அவர்கள் மறுப்பார்கள். அதை எதிர்கொள்வதற்கு, அவர்களது உணவில் காய்கறிகளை அறிமுகப்படுத்த நீங்கள் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் மேலும் அவர்களது ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சுவைமிக்க இணையுணவு பானங்களைக் கொடுக்க வேண்டும். நினைவிருக்கட்டும், அவர்களது வாழ்வில் இருந்து கிருமிகள் அல்லது தொற்றுகளை முற்றிலும் அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் ஒருசில சிறிய முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வதன் மூலம் நாம் அவர்களது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவி செய்யலாம்.

http://Facebook page / easy 24 news

Previous Post

காற்று மாசு அடைதலும்… மூளை பாதிப்பும்…

Next Post

ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! மீனாட்சி கங்குலி

Next Post
ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! மீனாட்சி கங்குலி

ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! மீனாட்சி கங்குலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025

Recent News

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures