Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி போடாதவர்கள்!

September 8, 2021
in News, Sri Lanka News
0
ஒரே நாளில் 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த 44 பேரில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும், ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுமாவர் என்பதால் தடுப்பூசிகளை முன்வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை 5877 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும், ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுமாக உள்ளனர்.

கடந்த 2 வாரங்களாக தொற்றாளர் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டது. தினமும் 500 தொடக்கம் 600க்கு மேற்பட்டவர்களிற்கு பரிசோதிக்கப்பட்டவர்களிற்கு 250 பேர்வரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள்.

இந்த வாரம் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் தொற்றாளர் எண்ணிக்கை 150க்கு கீழாக காணப்பட்டது. இந்தவாரம் தொற்று மேலும் குறையும் என எதிர்பார்க்கின்றோம். மககளின் ஒத்துழைப்பே பிரச்சினையாக உள்ளது.

நாடு முடக்கப்பட்டிருந்தாலும், மக்களிற்கு வெளியே செல்வதற்கு சில அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் துஸ்பிரயோகம் செய்வதாக உணர முடிகின்றது. வழங்கப்படும் அனுமதியை பயன்படுத்தி தேவையற்று நடமாடுகின்றனர்.

மாஸ்க் அணிந்திருந்தாலும் இடைவெளியை பேணாததை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நடைமுறை தொடருமாயின் எதிர்வரும் வரும் நாட்டிகளில் மீண்டும் தொற்று அதிகரிப்பதற்கான ஆபத்து உள்ளது. இ்த முடக்கம் அதிகரித்தல் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் மீண்டும் இந்த தொற்று அதிகரிக்கும். ஆகவே மக்கள் தேவையற்ற விதத்திலே வீதியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

அதேவேளை வீடுகளில் தேவையற்ற நிழ்வுகளையும் தவிர்க்க வேண்டும். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்டவை அயல் வீடுகளுடன் இணைந்து நடார்த்துவதை அவதானிக்க முடிகின்றது. அவற்றை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தொற்று காணப்படுபவர்களில் அநேகமாக வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகின்றது.அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்கான நோய் அதிகரிப்பு காணப்படுமிடத்து வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அரிசி விலைக்கட்டுப்பாடு! ஸ்ரீலங்கா ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Next Post

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post
மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures