Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கால்பந்தாட்ட வீரர்களுக்கு கத்தாரில் விசேட பயிற்சி

September 1, 2021
in News, Sports
0
இலங்கை கால்பந்தாட்ட வீரர்களுக்கு கத்தாரில் விசேட பயிற்சி

மாலைதீவுகளின் தலைநகர் மாலேயில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன (சாஃப்) சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியினருக்கு கத்தாரில் விசேட பயிற்சிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

 

கொரோனா தொற்று, தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக தேசிய அணியினால் முறையான பயிற்சிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் தற்போது சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி பெத்தகானவில் உயிரியல் குமிழிக்குள் தேசிய வீரர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு இலங்கை அணியினர் கத்தாரில் பயிற்சி பெறுவதற்கு உதவுமாறு கத்தார் கால்பந்தாட்ட சங்கத் தலைவர் ஷெய்க் ஹமாத் பின் கலிபா பின் அல் தானியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளளத் தலைவர் ஜஸ்வர் உமர் கோரிக்கை விடுத்தார்.

இதன் பலனாக இலங்கை கால்பந்தாட்ட அணியினர் கத்தாரில் 16 நாட்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் சிநேகபூர் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கும் அல் தானி அனுமதித்துள்ளார் என ஜஸ்வர் உமர் கூறினார்.

கத்தாரில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக 24 வீரர்களைக்கொண்ட தேசிய குழாம் இம் மாதம் 8ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றது.

இங்கிலாந்தில் வசித்து வரும் மார்வின் ஹெமில்டனும் டிலொன் டி சில்வாவும் அங்கிருந்து நேரடியாக கத்தாருக்கு சென்று இலங்கை குழாத்துடன் இணைந்துகொள்வர். அத்துடன் தேசிய வீரர்களுடன் பயிற்றுநர் மற்றும் உதவியாளர்கள் 11 பேர் கத்தார் செல்லவுள்ளனர்.

கத்தாரில் பயிற்சிகளில் ஈடுபடும் இலங்கை அணியினர் அங்கிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி நேரடியாக மாலைதீவுகளுக்கு செல்வர்.

பங்களாதேஷ், இந்தியா, வரவேற்பு நாடான மாலைதீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றும் சாஃப் சம்பியன்ஷிப் மாலே விளையாட்டரங்கில் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கை தேசிய கால்பந்தாட்டக் குழாம்

சுஜான் பெரேரா, ருவன் அருணசிறி, தனுஷ்க ராஜபக்ஷ, ஹர்ஷ பெர்னாண்டோ, ரொஷான் அப்புஹாமி, சமோத் டில்ஷான், சரித்த ரத்நாயக்க, டக்ஸ்சன் பியூஸ்லஸ், மார்வின் ஹெமில்டன், சலன சமீர, ஜூட் சுபன், மொஹமத் முஷ்தாக், மொஹமத் பஸால், மொஹமத் ஷிபான், கவிந்து இஷான், டிலொன் டி சில்வா, வசீம் ராஸீக், மொஹமத் ஆக்கிப், அசிக்கூர் ரஹுமான், மொஹமத் ஹஸ்மீர், சுப்புன் தனஞ்சய, ரிப்கான் மொஹமத். அமான் பைஸர். அபீல் மொஹமத், கவீஷ் பெர்னாண்டோ, நுவன் கிம்ஹான.

பயிற்றுநர் குழாத்தில் புதிதாக முன்னாள் தேசிய வீரர்களான மொஹமத் ஹசன் ரூமி (கலம்போ எவ்சி தலைமைப் பயிற்றுநர்), ராஜமணி தேவசகாயம் (புளூ ஸ்டார் தலைமைப் பயிற்றுநர்) ஆகிய இருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப பயிற்றுநராக ரூமியும் உதவிப் பயிற்றுநராக தேவசகாயமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அணியின் தலைமைப் பயிற்றுநராக தொடர்ந்தும் அமீர் அலார்ஜிக்கும் கோல்காப்பாளர் பயிற்றுநராக அமீர் டொக்சான்அல்டிஸும் செயற்படுவர். அணியின் முகாமையாளராக ஆசிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

மரணங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும்! அதி அபாய வலயத்திற்குள் இலங்கை

Next Post

பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது

Next Post
அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம்

பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

July 6, 2026

Recent News

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

July 6, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures