Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முகக்கவசம் அணிதல் சட்டம் குறித்து பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

August 14, 2021
in News, Sri Lanka News
0
நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகம்

முகக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல்  மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்திற்கமைய கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத அல்லது முகக்கவசத்தை முறையாக அணியாத நபர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சகல நபர்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று 2020 ஒக்டோபர் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்திற்குரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நபரொருவர் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவாராயின் அவர் தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டம் மற்றும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் தண்டனை சட்டக்கோவையின் 264 உறுப்புரைக்கமைய குற்றமிழைத்தவராகக் கருதப்படுவார்.

இது பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடிய குற்றம் ஆகும். அதற்கமைய சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த பொலிஸார்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.  சகல பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அதனை முறையாக அணிந்திருக்காவிட்டால் அதனையும் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

155 பேர் கொரோனாவுக்கு பலி ! 85 ஆண்கள், 70 பெண்கள் : 3,142 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !

Next Post

புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தயாராகிறது அரசாங்கம்

Next Post
மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தயாராகிறது அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures