Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்! விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்!!

August 6, 2021
in News, ஆன்மீகம்
0
பல பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கும் ஒரு வரி பரிகாரங்கள்

ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

பிறப்பு, இறப்பு வாழ்க்கை சுழற்சியை அறுத்து, வீடுபேறு அளிக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய ஒரு அற்புத தினம் தான் பிரதோஷம். ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளையில் பூஜை செய்து நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். .

ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

தமிழ்நாட்டில் பொதுமுடக்கமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Next Post

இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

Next Post
இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி - அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures