Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா

July 11, 2021
in News, World
0
தலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா

ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுமார் 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தெற்கு நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை தலிபான் போராளிகள் கைப்பற்றியதை அடுத்து, இந்திய விமானப்படை விமானத்தில் காந்தஹாரில் இருந்து சுமார் 50 தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளது.

தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் விமானப்படை விமானங்களினூடாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

“ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“காந்தஹாரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மூடப்படவில்லை. இருப்பினும், காந்தஹார் நகருக்கு அருகே கடுமையான மோதல் காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் தற்போதைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது முற்றிலும் தற்காலிக நடவடிக்கை என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். தூதரகம் எங்கள் உள்ளூர் ஊழியர்கள் மூலம் தொடர்ந்து செயல்படுகிறது” என்று வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சியின் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக, ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களைக் சந்தித்துள்ளது.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் அமெரிக்கா தனது படைகளை வெளியேற்றுவதால் தலிபான்கள் நாட்டின் மீது கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகளை தற்சமயம் முன்னெடுத்து வருகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம்: ஐக்கிய நாடுகள் சபை

Next Post

ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்

Next Post

ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் - அஜித் ரசிகர்கள் உற்சாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures