Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு ஆபத்து

May 26, 2021
in News, Sports
0

ஜப்பானின் தீவிர வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று புதிய அறிக்கையொன்று கூறுகிறது.

நிலையான விளையாட்டுக்கான பிரிட்டிஷ் சங்கத்தினால் (British Association for Sustainable Sport) புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜப்பானில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து முன்னணி விளையாட்டு வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கவலைகளை இந்த அறிக்கை விவரிக்கிறது.

அறிக்கையின்படி, டோக்கியோவில் சராசரி ஆண்டு வெப்பநிலை “1900 முதல் 2.86 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது, இது உலகின் சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.”

ஒலிம்பிக் எதிர்வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. ஜப்பான் வழக்கமாக அதன் மிக உயர்ந்த வருடாந்திர வெப்பநிலையை அனுபவிக்கும் காலம் இதுவாகும், இது வெப்பமயமாதல் காலநிலையில் இன்னும் அதிகமாக உயர்வடைவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் டிரையத்லான், மராத்தான், டென்னிஸ் மற்றும் படகுப்போட்டி போன்ற நிகழ்வுகள் வெப்பமான சூழ்நிலைகளால் எவ்வாறு மோசமாக பாதிக்கப்படலாம் என்பதையும் ஆய்வு விவரிக்கிறது.

இதேவேளை வெப்பத்தில் போட்டியிடுவதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த விளையாட்டு வீரர்களுக்கு இது ஆலோசனைகளையும் அறிக்கை வழங்குகிறது.

அத்துடன் காலநிலை நெருக்கடி எதிர்காலத்தில் விளையாட்டு நிகழ்வுகளை எவ்வாறு பாதிப்படையச் செய்யும் என்பது குறித்தும் அறிக்கை எச்சரிக்கிறது.

தற்போதைய கொவிட் நிலைமைகள் டோக்கியோ விளையாட்டுக்கள் தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் வெளியாகியுள்ள இப் புதிய அறிக்கையானது மேலும் கவலைகளை அதிகரித்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

பெண் புலிகளை கொச்சப்படுத்தும் பேமிலிமேன் 2ஐ தடை செய்ய வேண்டும்! கவிஞர் தீபச்செல்வன்

Next Post

குழந்தைகளுக்கு வழங்கக் கூடாத உணவுகள்

Next Post

குழந்தைகளுக்கு வழங்கக் கூடாத உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures