Monday, May 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக இனவழிப்புக்கான நீதி: த.தே.ம.மு

May 16, 2021
in News, Politics
0
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்!

The International Criminal Court building is seen in The Hague, Netherlands, January 16, 2019. REUTERS/Piroschka van de Wouw

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோரிக்கை விடுக, வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கு பெரும் சவாலாக கொரோனா அலை உருவெடுத்துள்ள நிலையில் இலங்கை அரசினால்  முடக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆ.ர் பரிசோதனை முடிவுகளை பல நாட்கள் கடந்தும் வழங்க முடியாது சுகாதாரத் துறையினர் திண்டாடுகின்றனர்.

இப்பிரதேசங்களில் பொது மக்களுக்கான  தடுப்பூசிகளை அரசு இன்னமும் வழங்கியிருக்கவுமில்லை. இவ்வாறு தொற்று அதிகரித்துள்ள தாயகப் பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை தேவைக்கேற்ப வழங்காது தொற்றாளர்கள் அனைத்து இடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாது நடமாடும் அபாய நிலையை அரசு வேண்டுமென்றே தமிழர் தாயகப்பிரதேசங்களில் தோற்றுவித்துள்ளதா, முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை இலங்கை அரசு கொரோனா பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

இன்றைய நெருக்கடியான சூழலிலும் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூர்வதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் மனிதப் பேரவலத்தை உலகறியச்செய்வதும் அடுத்த தலைமுறைகளுக்கு அதனைக் கடத்துவதும் எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும். மேலும் கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ள அரசு, கொரோனா தொற்றிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க விசேட அக்கறை செலுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே கொரோனா  பேரழிவுத் தொற்று  வேகமாக பரவி வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைமையாய் எமது மக்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் எமக்குண்டு.

இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து  கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதி நாளான 18 ஆம் திகதி பொது இடங்களிலும், இல்லங்களிலும் ஒன்றுசேர்வதைத் ஒன்று கூடுவதைத் தவிர்த்து கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு அமைவாக  முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியைப் பேணியவாறு  ஒவ்வொருவரும் தனித்தனியாக விளக்கேற்றியும்  அஞ்சலிக்குமாறு கோருகின்றோம்.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த பட்டினிச் சாவை நினைவு கொள்ளும் வகையில் கஞ்சியினை பரிமாறி  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூரும் இவ்வரலாற்றுக் கடமைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு எமது மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

ஓரிடத்தில் ஒன்று கூடி நினைவேந்துவதே எமது கூட்டுரிமையாகும். எனினும் இம்முறை கொரோனா ஆபத்து நிலையில் ஓரிடத்தில் ஒன்று கூடுவதிலுள்ள ஆபத்தினை கருத்திற் கொண்டு தனித்தனியாக நினைவேந்தலை மேற்கொண்டாலும், இந்நினைவு கூரல் நிகழ்வுகள் மூலமான  கூட்டுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக அவற்றை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பங்களாதேஷ் நோக்கி புறப்பட்ட இலங்கை அணி

Next Post

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது !

Next Post
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது !

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

May 19, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

போர் வெற்றியை புறக்கணித்து மௌனத்தில் ஜனாதிபதி அநுர!

May 19, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

May 18, 2025
கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

May 18, 2025

Recent News

முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

May 19, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

போர் வெற்றியை புறக்கணித்து மௌனத்தில் ஜனாதிபதி அநுர!

May 19, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

May 18, 2025
கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

May 18, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures