இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட ரத்மெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பின்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, நாரான்பிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு பின்வத்த மேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, பண்டாரகம பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு முன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸ வீரசிங்கம் சதுக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு
கம்பஹா மாவட்த்தின் வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேங்கள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.