களனி பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாண மாணவியொருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், இணுவிலை சேர்ந்த குறிப்பிட்ட மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாயொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இணுவிலை சேர்ந்த, களனி பல்கலைகழக முதலாம் வருட மாணவி யதீசா ஸ்ரீதர் (20) என்பவரே உயிரிழந்தார்.
அவர் வெள்ளவத்தையில் தங்கியிருந்து பல்கலைகழக கல்வியை மேற்கொண்டார்.
அவரது மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், இப்படி சுகவீனமடைந்தவர் உயிரிழப்பதற்கு காரணமில்லையென்பதால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென உறவினர்கள் கோருவதாக செய்திகள் வெளியாகின.

