Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொற்றாளர் அதிகரித்தால் நாடு முடங்கும்- சவேந்திர சில்வா

October 5, 2020
in News, Politics, World
0

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்தால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். எனவே, நாட்டு மக்கள் கொரோனாத் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சமூகத்தில் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். . இது அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது. எனினும், மக்கள் பீதியடையாமல் கொரோனாத் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் கம்பஹா, திவுலப்பிட்டியப் பகுதியில் குறித்த குடும்பப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது தொடர்பில் சுகாதாரப் பிரிவினரும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண் மினுவாங்கொடைப் பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்தமையால் குறித்த ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அதேவேளை, அங்கு அவருடன் தொடர்புகளைப் பேணிய 400 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. தொற்றாளர்கள் அதிகரித்தால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். ஏனெனில் குறித்த குடும்பப் பெண்ணுடன் தொடர்பைப் பேணிய பணியாளர்கள் நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். எனினும், நாட்டை உடனே முடக்க மாட்டோம். தொற்றின் வீரியத்தையும் நாட்டின் நிலைமையையும் அவதானித்த பின்னரே ஊரடங்குச் சட்டத்தை நாடு முழுவதிலும் விஸ்தரிப்பது தொடர்பில் முடிவெடுப்போம்.

தற்போது கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுகளின் 7 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மட்டுமே மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடு முழுவதும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றிலிருந்து இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பல்லைக்கழகங்களுக்கான விடுமுறைகள் தொடர்பில் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தானது. அதன் தீவிரத்தன்மை இலங்கையில் இன்னமும் குறையவில்லை. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எத்தனை பாதுகாப்பு அடுக்குகளைத் தாண்டி அவரைக் கொரோனா தங்கியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்

Previous Post

பரீட்சைகள் பிற்போடுவது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை இல்லை-சனத்பூஜித

Next Post

வவுனியா சுற்றுலா மையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

Next Post

வவுனியா சுற்றுலா மையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures