Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை

September 21, 2020
in News, Politics, World
0

கண்டி – பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பூவெலிகட பகுதியில் நேற்று காலை 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் குறித்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

குறித்த கட்டடம் நிலையற்ற நிலத்தில் அமைக்கப்பட்டமையின் காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார போகாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கட்டடத்திற்கு அருகில் உள்ள 3 வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம்

Next Post

கட்சிகளின் ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்கவேண்டும்- இரா. சம்பந்தன்

Next Post

கட்சிகளின் ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்கவேண்டும்- இரா. சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures