வவுனியா குருந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த தாய் முதலையும் 12குட்டிகளையும் பொதுமக்கள் ஒன்றினைந்து மீட்டுள்ளனர்.
வவுனியா பகுதியில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நீர்நிலைகளை தேடியலைந்த பன்னிரெண்டு குட்டி முதலைகளும், தாய் முதலையும் வவுனியா குருந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளன.
இவ் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று (19) காலை குறித்த பிரதேசத்தை சேர்ந்த தோட்டத்திலுள்ள கிணற்றை சுத்தம் செய்வதற்காக சென்ற போது ஒரு முதலை இருப்பதை கண்டுள்ளார். பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் பெகோ இயந்திரத்தை பயன்படுத்தி முதலையும் 12 குட்டிகளும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட முதலைகள் பாதுகாப்பாக காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளன.
வறட்சியான காரணமாக குருந்துபிட்டிய குளத்தில் நீர் நிலைகள் வற்றி காணப்படுவதனால் அங்கிருந்து முதலைகள் வெளியேறி நீர்நிலைகளை தேடி சென்றதனாலேயே கிணற்றிற்குள் வீழ்ந்திருப்பதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

