Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியற் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

June 24, 2020
in News, Politics, World
0

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியற் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டு ஊடக மையத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமை தொடர்பிலான ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மாத இரண்டாம் வாரத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களைச் சந்தித்து எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு, ஒரு ஒப்பந்தப் படிவமொன்றையும் சமர்ப்பித்தோம். தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியற் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாம் என்ற தூரநோக்கத்துடனுமே இச்சந்திப்பினை மேற்கொண்டோம்.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் 2016ம் ஆண்டு எமது கட்சியை ஆரம்பித்து, அதனைப் பதிவதற்குத் தேர்தல் ஆணையகத்தில் விண்ணப்பத்தினை மேற்கொண்டுள்ளதுடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் ரீதியான பயணத்திலே ஈடுபட்டு வருகின்றோம். கடந்த பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தோம்.

வெற்றியோ தோல்வியோ எமது இனத்திற்காக யுத்தம் செய்தவர்கள் நாங்கள். எனவே நாம் அரசியலில் இருந்து ஒதுங்காது அனைத்து தேர்தல்களிலும் களமிறங்க வேண்டும் என்கின்ற விடயம் பலரால் வலியுறுத்தப்பட்டது. இதன் பிரகாரம் வன்னி மாவட்டத்திலே சுயேட்சைக் குழு சார்பில் போட்டியிடுவதற்கு ஆலோசித்தோம். பின்னர் எமது மத்தியகுழு, போராளிகள் மற்றும் ஆலோசகர்களின் கருத்துக்களின் படி தற்போது இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இராணுவப் புலனாய்வாளர்கள் உட்பட உள்நாட்டு nளிநாட்டு தீயசக்திகளினால் எமது போராளிகளினதும், தமிழ் மக்களினதும் வாக்குகளைப் பிரித்து சின்னாபின்னாக்குவதற்காகப் பல சுயேட்சைக் குழுக்கள் வடக்கு கிழக்கு சார்ந்த பிரதேசங்களில் மாவட்ட ரீதியாக களமிறக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தூரநோக்குடன் சிந்தித்தே இம்முறை தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டு எமது தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட எமது பாரம்பரியக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உந்துசக்தியாக இருப்பதோடு, தேர்தல் பிரசாரங்களிலே எமது போராளிகளையும் உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வலுப்பெறச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தோம்.

ஆயுதப் பலத்துடன் சேர்ந்து அரசியற் பலமும் இருக்க வேண்டும் என்ற தூரநோக்கத்துடன் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போது அதிலிருந்து ஆட்களும், சில கட்சிகளும் பிரிந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பிரிந்து செயற்படவில்லை. மாறாக தமிழ் மக்களின் வாக்குகளுக்காகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவுமே செயற்படுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பலதரப்பட்ட கட்சிகள் இன்று உருவெடுத்து நிற்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் விடும் பிழைகளை உள்ளிருந்து சுட்டிக்காட்டி திருத்த வேண்டும் அல்லது அவர்களை வலத்தி விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்பெற வைத்து நடத்த வேண்டும் என்றில்லாமல் ஆளுக்காள் பிரிந்து ஒவ்வொரு கட்சியை உருவாக்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கினைப் பிரிப்பதற்காக முற்படுகின்றார்கள்.

தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேரம்பேசும் சக்தியாக வலுப்பெறச் செய்வதற்காக புனர்வாழ்வளிக்கட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்து எமது போராளிகளையும் இணைத்து பயணிப்பதற்கான முடிவினை எடுத்திருக்கின்றோம். நாம் மாவை சேனாதிராஜா அவர்களை சந்தித்தமை தொடர்பில் நேற்றைய தினம் அவருடன் தொலைபேசியில் தொடர்ப கொண்டு வினவியபோது இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்த தீர்க்கமான பதிலைத் தருவதாக அவர் வாக்குறுதியளித்திருக்கின்றார். எமக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு சரியான முடிவினைச் சொல்லுமாக இருந்தால் அந்த அந்த மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் இணைந்து எமது போராளிகளும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று தெரிவித்தார்.

Previous Post

மேலும் 7 பேருக்கு கொரோனா

Next Post

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

Next Post

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures