Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்தித்து வந்து சில மணித்தியாலங்களில் இறைவனடி சேர்ந்துவிட்டார் ; க.வி.விக்னேஸ்வரன்

May 27, 2020
in News, Politics, World
0

ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். புதிய இந்திய தூதுவரைச் சந்தித்து வந்து சில மணித்தியாலங்களில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகம் பல தடவைகள் என்னைக் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணம் வரும் போது முடியும் போதெல்லாம் வந்து சந்திப்பார். அவர் என்னை அரசியல்வாதி என்ற ரீதியில் சந்திப்பதை விட தனது பாட்டனாரின் நண்பர் என்ற முறையிலேயே வந்து பலமுறை சந்தித்ததுண்டு.

சௌம்யமூரத்தி தொண்டமான் அவர்கள் கொழும்பில் என் வீட்டுக்கு அருகாமையில் றோயல் கல்லூரிக்கு முன்புறத்தில் தான் அந்தக் காலங்களில் குடியிருந்தார். அவரை ஒருமுறை நானும் வேறு சிலரும் சந்தித்த போது தனக்குப் பின் யார் என்று அவர் அங்கலாய்த்ததை நாம் கண்டோம். மகன் இராமநாதன் நல்லவர் என்றும் ஆனால் அவரால் தனது பதவியின் சுமையைத் தூக்க முடியுமா, தாங்க முடியுமா? என்று உரக்கக் கேட்டார்.
அப்போது தான் அவரின் பேரன் ஆறுமுகத்தை உள் கொண்டு வருவது பற்றிப் பேசப்பட்டது. ஆறுமுகமே தகுந்த வாரிசு எனவும் அவர் வயதில் குறைந்தவராக இருந்தாலும் காலா காலத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்;றும் அங்குள்ளவர்களால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. சில காலங்களில் ஆறுமுகம் தனது பணியை ஏற்றார்.

காலக்கிரமத்தில் அவர் தம் பணியை உணர்ந்து மலையக மக்களுக்கு ஒரு வலுவான தலைவராகத் திகழ்ந்தார். பாட்டனாரின் வழியில் அவர் அவர்களை திறம்பட வழி நடத்தி வந்து சடுதியாக எம்மைவிட்டுப் பிரிந்தமை மலையக மக்களுக்கும் எமக்கும் மிகுந்த துயரையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் தலைமைத்துவத்தில் ஒரு பாரிய இடைவெளி தெரிகின்றது.

தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு சவாலான கால கட்டமான இத்தருணத்தில் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு ஒரு பேரதிர்ச்சியாக உணரப்படுகிறது. அவரின் வெற்றிடம் விரைவில் தக்கவரால் நிரப்பப்பட வேண்டும்.

ஒருவர் சடுதியாக வானுலகு ஏகுவது புண்ணியம் என்று கூறுவார்கள். அந்த விதத்தில் ஆறுமுகம் தொண்டமான் நீண்டகால சுகயீனத்தையோ துன்பத்தையோ எதிர் நோக்காமல் சென்றமை ஒரு புண்ணியம் என்றே கொள்ள வேண்டும்.

ஆறுமுகம் குடும்பத்தினருக்கு எனது உளமார்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முக்கியமாகத் தம்பி செந்தில் தொண்டமானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆறுமுகம் தொண்டமானின் ஆத்மா இறையடி சேர்வதாக என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மலையென நிமிர்ந்து நின்ற மலையக தலைவருக்கு எமது அஞ்சலி ; டக்ளஸ்

Next Post

ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை ராஜிதவுக்கு விளக்கமறியல்!!

Next Post

ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை ராஜிதவுக்கு விளக்கமறியல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures