Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

52 பேரை பலியெடுத்த பேருந்து விபத்து!

January 19, 2018
in News, Politics, World
0

கசகஸ்தானில் பயணிகள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானத்தில் 52 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

கசகஸ்தானில் உள்ள அக்டோபே மாகாணத்தில் அமைந்துள்ள இர்கிஸ் மாவட்டத்தில் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் தீவிபத்துக்குள்ளானது.

இதில் அப்பேருந்தில் பயண செய்த 52 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

பலியானவர்கள் அனைவரும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை.

மட்டுமின்றி பெரும்பாலும் குறித்த நெடுஞ்சாலையானது உஸ்பெகிஸ்தான் அகதிகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உஸ்பெகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் கசகஸ்தானில் இருந்து செயல்படும் பேருந்து ஒன்று ரஷ்யாவில் இருந்து இயக்கப்படும் ரயில் மீது மோதியதில் 17 பேர் கொல்லப்பட்டனர். குறித்த பேருந்தில் சுமார் 50 பேர் அச்சமயம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கிரிக்கெட் நட்சத்திரத்தினால் இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிநவீன கார்

Next Post

வவுனியா மாவட்டத்தில் சிவப்பு வலய எச்சரிக்கை!

Next Post

வவுனியா மாவட்டத்தில் சிவப்பு வலய எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures