Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

5000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்!

June 10, 2021
in News, Sri Lanka News
0
ரூ.5,000 தாள்கள் நீக்கப்படாது

கொவிட்-19 தொற்று காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக தற்போது வழங்கப்பட்டுவரும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும்.

வருமானம் குறைந்த குடும்பங்கள் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இதற்கான கொடுப்பனவு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவிற்கான மேன்முறையீடு செய்ய முடியும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்களாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு முதல் கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிரமமான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாக இக் கொடுப்பனவு சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள், தொழிலிழந்தோர், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வருமானத்தை இழந்த குடும்பங்கள், முதியோர்கள், நாட்பட்ட நோயாளிகள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இக் கொடுப்பனவும் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக 83 ஆயிரத்தி 666 குடும்பங்களுக்காக 418.33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பணிப்பாளர் வி.ஜெகதீசன் மேலும் தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்

Next Post

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு

Next Post

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures