இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 48 இந்தியமீனவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சபேசன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட புதுக்கோட்டை, நாகபட்டிணத்தை சேர்ந்த 48 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணம் செய்த 12 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் யாழ்மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடத்தில் பாரப்படுத்தப்பட்டு பின்னர் இரவு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில்முற்படுத்தப்பட்டனர்.
அதன் போதே மேற்படி விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.