Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

400 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றி சாதனை

January 12, 2018
in News, Uncategorized, World
0

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், குறைபிரசவத்தில் பிறந்து 400 கிராம் எடையே இருந்த குழந்தையை, மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

பொதுவாக, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்றுவது என்பது அரிதான காரியமாகும். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குறை பிரசவத்தில் பிறந்த, 400 கிராம் எடையுள்ள குழந்தை ஒன்றை மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, திருமணமாகி 35 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது. ஆனால், கர்பத்தை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு அந்த பெண்ணின் உடல்நிலை இல்லை.

மேலும், கர்ப்பமான சில மாதங்களிலேயே அவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு, அப்பெண்ணிற்கு ’அல்ட்ரா சோனாகிராபி’ எனும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் மூலம், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் போகவில்லை என்று தெரிய வந்தது.மேலும், குழந்தை உயிரிழக்கும் தருவாயில் இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஜூன் 15ஆம் திகதி, குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். பெண் குழந்தையான அது, 400 கிராம் எடையுடனும், 8.6 அங்குல நீளமும் மட்டுமே கொண்டிருந்தது.

குழந்தையின் நுரையீரல் சரியாக வளராததால், சுவாசிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளது. பின்னர், கருவிகளின் உதவியுடன் குழந்தைக்கு சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், உணவை உட்கொள்ளும் அளவுக்கு குழந்தை வளர்ச்சியடையாததால், குழந்தைக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தும் ரத்தம் மூலமாகவே செலுத்தப்பட்டது.

இதன் விளைவாக குழந்தையின் வளர்ச்சி வேகம் அதிகரித்தது. தற்போது குழந்தையின் உடல் முழுவளர்ச்சி அடைந்து, உடல் எடை 2 கிலோ 400 கிராம் ஆக உள்ளது.

இது குறித்து குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஜாங்கிட் கூறுகையில், ‘இந்திய துணைக்கண்டத்தில் இவ்வளவு குறைவான எடை கொண்ட குழந்தை உயிர் பிழைத்ததில்லை.

மொகாலியில், கடந்த 2012ஆம் ஆண்டு ரஜினி என்ற குழந்தை, 450 கிராம் எடையுடன் பிறந்தது. ஆனால், இந்த குழந்தை 400 கிராம் எடையுடன் பிறந்து காப்பாற்றப்பட்டுள்ளது, தெற்காசியாவிலேயே இது தான் முதல் முறையாகும்.

குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது தான், எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும், மிகுந்த போராட்டத்திற்கு பிறகு குழந்தையை காப்பாற்றியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

Previous Post

மஹிந்த போட்ட இரகசிய சதித்திட்டம் அம்பலம்!

Next Post

பிரியாணியா கொன்றது ?

Next Post

பிரியாணியா கொன்றது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures