Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

January 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

இலங்கை அகதிகள் 38 பேர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் இன்று (ஜன. 6) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர், தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவின் மங்களூரில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகதிகளை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு அகதிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டினை செய்வதற்காக 15 நாட்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும், தம்மை அனுப்புவதற்கான ஏற்பாட்டினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் யாரிடம் தொடர்புகொண்டு பேசுவது என்பது தெரியாமல்  பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு விடுதியில் தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு, மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

மங்களூரில் உள்ள அகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 26 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவருமாக 38 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை விடுவிக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இதன்போது அகதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous Post

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Next Post

ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இவர்?

Next Post
ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இவர்?

ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இவர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures