Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

35,000 மெட்ரிக் தொன் டீசலை அனுப்பியது இந்தியா

March 21, 2022
in News, Sri Lanka News
0

இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது எரிபொருள் தொகையுடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலில் 35,000 மெட்ரிக் தொன் டீசல் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள எரிபொருள் தொகை கொலன்னாவ களஞ்சியசாலையில் தரையிறக்கப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனை விரைவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக நாட்டில் தேவையானளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் , அவை அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

எவ்வாறிருப்பினும் நாட்டின் சகல பகுதிகளிலும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வரிசை குறைவடையவில்லை என்பதோடு, பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருளை வழங்குமாறு அறிவுறுத்தல்

அம்புலன்ஸ் வண்டிகளுக்கு தேவையானளவு எரிபொருளை வழங்குமாறு சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோயாளர்களை அவசர சிக்சைக்காக அழைத்துச் செல்வதைக் கருத்திற்கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளுக்கு எரிவாயுவை விநியோகிக்குமாறு அறிவுறுத்தல்

வைத்தியசாலைகளுக்கு தேவையானளவு சமையல் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்குமாறு விநியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, எரிவாயு தட்டுப்பாடு நிலவும் வைத்தியசாலைகளை துரிதமாக அது தொடர்பில் அறியத்தருமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

தொடர்ந்து எரிபொருளை இலங்கைக்கு வழங்க முடியாது : இந்திய எண்ணெய் நிறுவனம்

Next Post

பிரபாகரன் காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க மகிந்தவுக்கு அருகதையில்லை | அருள் ஜெயேந்திரன்

Next Post
பிரபாகரன் காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க மகிந்தவுக்கு அருகதையில்லை | அருள் ஜெயேந்திரன்

பிரபாகரன் காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க மகிந்தவுக்கு அருகதையில்லை | அருள் ஜெயேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures