ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துக்கொள்வதற்காக, 5 பேர் தமது குடும்ப உறுப்பினர்களுடன் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது என முன்னாள் பொலஸ் மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
2015 ஆம் ஆண்டு குறித்த 5 பேரும் தமது குடும்ப உறுப்பினர்கள் 34 பேருடன் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது என அவர் கூறினார்.
இந்தத் தகவல் குறித்து பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்க புலனாய்வு சேவை தனக்கு கீழ் இல்லாவிட்டாலும் தற்போதைய பணிப்பாளருக்கு, முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பாக அறிவுரை வழங்கியுள்ளதாகவும் என்.கே இளங்ககோன் குறிப்பிட்டார்.