அம்பாந்தோட்டை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (நவ.06) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மீன்பிடி படகுகளும் சிறிய ரக படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.