உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பிரதித்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்தனவுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புற்று நோய்க்கான 10 வகையான மருந்துகள் மற்றும் 15 வகையான விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகளே விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.ஆண்டிபயடிக், நீரிழிவுக்கான மருந்து வகை மற்றும் அதற்கான உபகரணங்கள், ஆஸ்துமா, வலி நிவாரணி உள்ளிட்ட சில விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

