Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

25 அமைச்சர்கள் பதவியேற்றனர்: நடிகை ரோஜாவுக்கு பதவி வழங்க மறுப்பு

June 9, 2019
in Cinema, News, Politics
0
25 அமைச்சர்கள் பதவியேற்றனர்: நடிகை ரோஜாவுக்கு பதவி வழங்க மறுப்பு

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அவருக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வராக கடந்த 30ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மட்டும் பதவியேற்றார்.

அமைச்சர்கள் யாரும் அவருடன் பதவியேற்கவில்லை.  இந்நிலையில், அவரது அமைச்சரவையில் பங்கேற்கும் 25 அமைச்சர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அப்போது அவர்களுக்கான இலாகாக்களும் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று இவர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இவர்களுடன் ஜாதி வாரியாக ஜெகன் நியமித்த ஐந்து துணை முதல்வர்களும் பதவியேற்றனர்.

25 அமைச்சர்களும், 5 துணை முதல்வர்களும் நேற்று பகல் 11.30 மணியளவில் அமராவதியில் உள்ள  தலைமை செயலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கொண்டனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற 14 பெண் எம்எல்ஏக்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி   கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியலில் ரோஜா  பெயர் இடம்பெறவில்லை.

அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் எனவும் மீண்டும்  இரண்டரை ஆண்டுகளுக்கு பின் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நேற்று நடந்த  எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையாக அறிவித்து விட்டார் அதன்படி 2வது அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ரோஜாவுக்கு விரைவில் சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

விஷத்தை பரப்புகிறார் பிரதமர் மோடி: ராகுல்

Next Post

அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!

Next Post
அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!

அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures