Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

22 லட்­சம் ரூபாவை பயணங்களுக்கு செலவிட்ட சி.வி.விக்னேஸ்வ­ரன்

July 8, 2018
in News, Politics, World
0

வடக்கு மாகாண முத­லமைச்­சர் சி.வி.விக்னேஸ்வ­ரன் தன்­னுடைய தனிப்­பட்ட உத­வி­யா­ள­ரை­யும் அழைத்­துக் கொண்டு கொழும்புக்­குச் சென்­று­வர கடந்த 4 ஆண்­டு­க­ளில் 22 லட்­சம் ரூபாவை வான் பய­ணங்­க­ளுக்­காக மட்டும் செலவிட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணத்துக்கும் கொழும்புக்கும் இடை­யில் வானூர்­திச் சேவையை வழங்­கும் ஹெலி ரு­வர்ஸ் நிறுவ­னம் கொழும்பு சென்று யாழ்ப்­­பாணம் திரும்­பு­வ­தற்கு தற்­போது 29 ஆயி­ரம் ரூபாவை இரு­வ­ழிக் கட்­ட­ணமாக அற­வி­டு­கின்­றது.

முத­லமைச்­ச­ரின் தற்­போ­தைய ஒவ்வொரு பய­ணத்­தின் ­போ­தும் அவ­ரது தனிப்­பட்ட உத­வியா­ள ­ருக்­கும் சேர்த்து 58ஆயி ரம் ரூபா மாகாண சபை நிதி யில் இருந்து செலுத்­தப்­பட்­டுள்ளது.

கொழும்­புக்­குச் சென்­று­வ­ரு­வதற்கு வானூர்­தி­யைப் பயன்­ப டுத்து­வ­தற்­கான அனு­ம­தியை வடக்கு மாகாண ஆளு­ந­ராக மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி இருந்­த­ போது முத­ல­மைச்­சர் பெற்­றுக் கொண்­டி­ருந்­தார்.

அத­ன­டிப்படை­ யி­லேயே அவர் தனது வானூர்­திப் பய ­ணங்­களை மேற்­கொள்­கி­றார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பத­வியேற்ற தொடக்­கத்­தில் வாகனத்­தி­ லேயே கொழும்­புக்­குச் சென்­று­வந்து கொண்­டி­ருந்­தார்.

அப்­போது வட­மா­காண ஆளு­ந­ராக இருந்­த­வ­ரான மேஜர் ஜென­ரல் ஜீ.ஏ.சந்­தி­ர­சிறி தான் கொழும்­பிற்கு வானூர்தி மூலம் சென்று வரு­வ­த­னால், முத­ல­மைச்­ச­ரும் மாகாண நிதி­யைப் பயன்­ப­டுத்தி வானூர்­திப் போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்­ள­லாம் என்று அனு­ம­தி வழங்­கி­னார்.

இதை­ய­டுத்து 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை­யான 4 ஆண்­டு­க­ளில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் 48 தட­வை­கள் விமா­னம் மூலம் கொழும்­பிற்கு சென்று வந்­துள்­ளார்.

இதற்­காக 22 லட்­சத்து 61 ஆயி­ரம் ரூபா பணம் ஷெலி­ரு­வர்ஸ் நிறு­வத்­திற்­குச் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

2014ஆம் ஆண்­டில் 11 தட­வை­க­ளும் , 2015ஆம் ஆண்­டில் 13 தட­வை­க­ளும் , 2016ஆம் ஆண்­டில் 15 தட­வை­க­ளும் 2017ஆம் ஆண்­டில் 9 தட­வை­க­ளும் முத­ல­மைச்­சர் கொழும்பு சென்று வந்­துள்­ளார்.

இவ்­வாறு பய­ணித்த 48 தட­வை­க­ளும் தன்­னு­டன் ஓர் உத­வி­யா­ள­ரை­யும் அழைத்­துச் சென்­றுள்­ளார். அவ்­வாறு அழைத்­துச் சென்ற உத­வி­யா­ள­ரின் போக்­கு­வ­ரத்­துக்­கும் மாகாண சபை­யின் நிதியே வழங்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­சர் வானூர்தி மூலம் சென்­று­வ­ரு­வ­தற்கு ஆளு­நர் வழங்­கிய அனு­ம­தி­யில் அவர் உத­வி­யா­ளர் ஒரு­வரை அழைத்­துச் செல்­வ­தற்­கும் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அவ­ரது பாது­காப்­புக்­கா­கப் பாது­கா­வ­லர் ஒரு­வர் அவ­ரோடு செல்­வது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டி­யதே என்­கி­ற­போ­தும் ஒவ்­வொரு தட­வை­யும் அவர் தனது தனிப்­பட்ட உத­வி­யா­ள­ரையே இவ்­வாறு அழைத்­துச் சென்­றி­ருக்­கி­றார்.

2014 , 2015ஆம் ஆண்­டு­க­ளில் இரு­வ­ழிக் கட்­ட­ண­மாக 35 ஆயி­ரம் ரூபா­வீ­தம் பணம் செலுத்­தப்­பட்ட நிலை­யில் 2016ஆம் ஆண்டு முதல் 58 ஆயி­ரம் ரூபா வீதம் பணம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

இலங்­கை­யில் உள்ள 9 மாகா­ணங்­க­ளில் வேறு எந்த மாகாண முத­ல­மைச்­ச­ரிற்­கும் இது­போன்ற சலுகை தற்­போ­து­வ­ரை­யில் வழங்­கப்­ப­டு­வது கிடை­யாது.

Previous Post

கூட்டுறவுத் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு

Next Post

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடல்

Next Post
முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடல்

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures