Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2029 ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றுவோம் | பெரமுன திட்டவட்டம்

March 13, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அவசர உதவி தேவைப்படுகின்றது! சர்வதேசத்திடம் அறிவித்தார் கோட்டாபய

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  2018 ஆம் ஆண்டு வெற்றிப் பெற்றதை போன்று அமோக வெற்றிப்பெறுவோம். 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே அதிகாரத்தை கைப்பற்றுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். சிறந்த தரப்பினரை  வேட்பாளர்களாக களமிறக்குவோம். வேட்புமனுத்தாக்கலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதை போன்று இம்முறையும் அமோக வெற்றிப்பெறுவோம். தேசிய மக்கள் சக்தியின் பொய் வாக்குறுதிகள் மற்றும் வெறுப்பினை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் பின்னடைவை எதிர்கொள்ளும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். கொழும்பு உட்பட முக்கிய பிரதேச சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம்.

2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக பொதுஜன பெரமுன பலமடையும். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், ஆட்சிக்கு வந்த பின்னரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக  இன்றும் போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கிறது.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி  மக்களை தவறாக வழிநடத்தியது. இதற்கு மக்கள் தகுந்த பாடம்புகட்டுவார்கள் என்றார்.

Previous Post

விவசாயத்தைக் கட்டியெழுப்பினால் நாடு முன்னேறும்: சபையில் சுட்டிக்காட்டிய சஜித்

Next Post

புதுக்குடியிருப்பில் பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து தங்க நகைகள் திருட்டு

Next Post
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

புதுக்குடியிருப்பில் பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து தங்க நகைகள் திருட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures