2023 ஆம் ஆண்டு முதல் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80 சத வீதமான பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2022 கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 சத வீத வருகையை உறுதிப்படுத்தல் கட்டாயமில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.