ரஷ்யாவின் போர் நிறுத்த அழைப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது.
ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தத்தினை புடின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இருப்பினும், இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியுள்ளதாவது,
உக்ரைனில் ரஷ்யா பிடித்துள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும்.
போர் முடிவு பிரகடனம் ரஷ்யாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை என்றும் கூறியுள்ளார்.