Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2 ஆவது முறையாக பொதுவெளியில் வட கொரிய ஜனாதிபதியின் மகள்

November 30, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
2 ஆவது முறையாக பொதுவெளியில் வட கொரிய ஜனாதிபதியின் மகள்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகள் இரண்டாவது முறையாக பொதுவெளியில் தோன்றியிருக்கிறார்.

இந்த முறை ஏவுகணை ஆராய்ச்சியாளர்களை அவர் சந்தித்துள்ளார். இந்த மாதம் ஏவப்பட்ட Hwasong-17 ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

எதிர்பாராத விதமாக கிம் ஜாங்க் உன்னின் மகள் பொதுவெளியில் தோன்றியது அடுத்த அரசியல் வாரிசாக அவருக்கு வழங்கப்படும் பயிற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது வரை கிம் ஜாங் உன் மகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயதும் யாருக்கும் தெரியாது.

தென்கொரியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கூறுவதன் படி, இந்த பெண் கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் கிம் ஜு ஏ, இவருக்கு 10 வயது இருக்கலாம்.

புதிதாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கிம் ஜங் உன்னின் இரண்டாவது மகள் அவருக்கு அருகில் நின்ற படி இராணுவத்தினருடன் இருக்கிறார்.

வடகொரிய அரசு ஊடகமான கொரியன் சென்டரல் நியூஸ் ஏஜென்ஸி KCNA அவரை ஜனாதிபதியின் மிகவும் பிரியமான மகள் என்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த தகவல்களும் பொதுவெளியில் கிடையாது. தென் கொரிய ஊடகங்கள் கிம் 2009ம் ஆண்டு ரி சொல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.

கிம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதை விட அவரது மகள் உலகுக்கு விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டார் என்றே ஊடகங்கள் கூறுகின்றன. கிம் இளைஞனாக வளர்ந்த பின்னர் தான் உலகுக்கு காட்டப்பட்டார்.

Previous Post

மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதுவதை தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லை | திமுக அரசு மீது சீமான் சாடல்

Next Post

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் தம்பதியர் மீது தாக்குதல் | ஒருவர் பலி ; ஹிக்கடுவையில் சம்பவம்

Next Post
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் தம்பதியர் மீது தாக்குதல் | ஒருவர் பலி ; ஹிக்கடுவையில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures