Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது

November 8, 2019
in News, Politics, World
0

19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வணிக சபையில் நேற்று  நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ரணில் விக்ரமசிங்கவின் அதிகார நோக்கமும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அதிகார நோக்கமும் 19 ஆம் திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது.

19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது. இந்த இரண்டில் ஒன்றை நாம் பின்பற்ற வேண்டும். ஒன்று நாம் முன்னர் இருந்த இடத்தில் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நாம் முழுமையாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். எமது யோசனைத் திட்டம் நாடாளுமன்றத்தை கேந்திரமாகக் கொண்ட ஆட்சி முறைமையாகும்.

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பெரும்பான்மை உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம்.

நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தால் அவர்கள் அனைவரும் அதனை இரத்து செய்வதற்காக கைகளை உயர்த்துவார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பாதுகாப்பு அமைச்சின் புதிய கட்டடம் திறந்து வைப்பு!

Next Post

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு ஊடகர்களுடன் சந்திப்பு

Next Post

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு ஊடகர்களுடன் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures