Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு இந்தியப் பிரஜைகள் கைது

August 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு இந்தியப் பிரஜைகள் கைது

18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று (20) அதிகாலை இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதோடு விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய இரண்டு வர்த்தகர்கள் எனவும் அவர்கள் அடிக்கடி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே விமானம் மூலம் சென்று வணிகம் செய்வதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் நிறையுடைய தங்க நகைகள், அதற்கு மேலதிகமாக அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், காலணிகள் மற்றும் உள்ளாடைகள் உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தங்க நகைகளுக்கு வெள்ளி முலாம் பூசி உள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Previous Post

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் ஐ.நா. அதிகாரிகள்

Next Post

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கலைக்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி | ஜஸ்வர் உமர்

Next Post
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கலைக்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி | ஜஸ்வர் உமர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கலைக்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி | ஜஸ்வர் உமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures