Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

November 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் தொடர் போராட்டம்

Silhouette group of people Raised Fist and Protest Signs in yellow evening sky background

பல்கலைக்கழகங்களின் வளப்பற்றாக்குறை,விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி 17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் இன்று வியாழக்கிழமை (02) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரச பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

விரிவுரையாளர்களர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பரண ஜயவர்தன குறிப்பிடுகையில்,

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.புதிய வரி கொள்கையினால் நிறைவடைந்த 10 மாத காலத்துக்குள் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் உள்ளவர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதால் பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் கட்டம் கட்டமாக வரையறுக்கப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டுக்கு பல்கலைகழகங்களுக்கு அதிகளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.வளப்பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதிகளவில் மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கினால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எடுத்துரைத்தோம். ஆனால் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே, பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையாக இல்லாதொழிக்க கூடாது என்பதற்காகவே விரிவுரையாளர்கள் நிலையான தீர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு கிடைக்காவின் எதிர்வரும் நாட்களில் கடுமையான தீர்மானங்களை எடுப்போம் என்றார்.

Previous Post

பிரிகேடியர் சு. ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நாள் இன்று!

Next Post

ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு | இரு தரப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்து !

Next Post
ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு | இரு தரப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்து !

ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு | இரு தரப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்து !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures