Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

15வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு

June 12, 2018
in News, Politics, World
0

15வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று  (11) முற்பகல் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு 11 ஆம் திகதி  முதல் 13ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கம்இ தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பதுறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இணை உறுப்பினர்கள் மற்றும் சர்வதேசஇ பிராந்திய நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு வருகை தந்தவர்களை ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொது செயலாளர் எரிவன் ஹேவோரான்க்சி (Areewan Haorangsi) அம்மையார் வரவேற்றார்.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் 15வது தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி மாநாட்டின் உப தலைவர் டெப்புவா ஹன்டர் (Tepua Hunter) அம்மையார் மாநாட்டைப் பற்றிய விளக்கவுரையை அளித்ததுடன்இ அங்குரார்ப்பண உரையை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆற்றினார்.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொது செயலாளர் எரிவன் ஹேவோரான்க்சி அம்மையாரினால் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட நினைவுப்பரிசு வழங்கப்பட்டதுடன் ஜனாதிபதியும் அவருக்கு நினைவுப் பரிசொன்றினை வழங்கினார்.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை துரிதமாக பூர்த்தி செய்க

Next Post

சூரிய சக்தியினால் நீர் வழங்கும் முறை அறிமுகம்

Next Post
சூரிய சக்தியினால் நீர் வழங்கும் முறை அறிமுகம்

சூரிய சக்தியினால் நீர் வழங்கும் முறை அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures