Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

August 23, 2021
in News, Sri Lanka News
0
பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இதனை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாக அரசாங்கம் கருதக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று  திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டை முடக்காமல் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது.

எனினும் வர்த்தக சங்கங்கள் உள்ளிட்டவை சுயமாக முடக்கத்தை ஆரம்பித்தன. இதனை எதிர்பார்த்திராத ஜனாதிபதி விருப்பம் இல்லாவிட்டாலும் நாட்டை முடக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டார்.

எனவே தான் தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் தியாகங்களுக்கு தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி மறைமுகமாக நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

இந்த மறைமுக எச்சரிக்கையின் மூலம் எதிர்வரும் தினங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றின் காரணமாக இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கியமை மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அல்ல. அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இன்மையே இதற்கான பிரதான காரணி என்றும் அவர் தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

உலகளவில் முணுமுணுக்கும் பாடல் ! இலங்கையை திரும்பிப்பார்க்க வைத்த இளம் குரல்

Next Post

நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை இரண்டு வாரங்களிலேயே கண்டுகொள்ளலாம்!

Next Post
நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை இரண்டு வாரங்களிலேயே கண்டுகொள்ளலாம்!

நாட்டை முடக்கியதன் பெறுபேற்றை இரண்டு வாரங்களிலேயே கண்டுகொள்ளலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures