கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் நாடளாவிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் சட்டத்தை மீறிய 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை, ஹப்புத்தளை, தம்புள்ளை, வலஸ்முல்ல, நல்லதண்ணி, அம்பாறை, உஹன, பண்டாரகம, அக்மீமன, கருவலகஸ்வெவ உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு நகரில் சில இடங்களில் பொலிஸ் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

