மன்னார் கடற்பிராந்தியத்தில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து120 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரளக் கஞ்சாவைக் கடத்த பயன்படுத்தப்பட்ட படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

