நாட்டை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்திற்கான தொலைநோக்கு எனும் கொள்கைக்கு அமைவாக கல்வித்துறையில் மாற்றங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டில் 100 பல்கலைக்கழக கல்லுரிகள் University College அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைவாக அரசாங்௧ அச்சுத் திணைக்௧ளம் விரைவில் பல்கலைக்கழக கல்லுரியாக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான வளங்கள் அங்கிருப்பதினால் இதற்கான பணியை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பூர்த்திச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

