இன்று இதுவரை ஒரே ஒரு எண்ணெய் டாங்கர் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கும் MarineTraffic தளத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட செய்தியில், எதிர்மறை நோக்கமில்லாத கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால், அவை தகுந்த ஈரான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல் பாதையில் மாற்றம்
அதன்படி, எக்ரெட் டேங்கர் கப்பல் ஒன்று இன்று அதிகாலை ஹோர்முஸ் நீரிணையில் மேற்குத் திசையில் வளைகுடாவை நோக்கி பயணித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்தோடு, இந்த டேங்கர் வழக்கமான கப்பல் பாதையை விட, ஈரான் கடற்கரைக்கு அருகே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று, மொத்தம் ஆறு டாங்கர்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுள்ளன.
அவற்றில் மூன்று சீனாவுக்குச் சொந்தமானவை, இரண்டு இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை மற்றும் ஒன்று பனாமாவிற்கு பதிவு செய்யப்பட்டதாகும்.
