Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஹெலிகாப்டரில் வந்து போலீசில் சரணடைந்த வாலிபர்

May 30, 2021
in News, World
0

தாக்குதல் வழக்கில் தலைமறைவான வாலிபர் ஹெலிகாப்டரில் வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது

நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒடாகோ பிராந்தியத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரையன்ட். 32 வயதான இவர் தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அவர்களை கத்தியால் குத்தியதாக தெரிகிறது.இது தொடர்பான புகாரின் பேரில் ஜேம்ஸ் பிரையன்ட் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் அவரை கைது செய்வதற்கு அவர் தப்பி ஓடி தலைமறைவானார்.அவர் கடந்த 5 வாரங்களாக வயனகருவா என்ற நகரில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்தார்.

இதனிடையே ஜேம்ஸ் பிரையன்ட் ஆபத்தான நபர் எனவும் பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உள்ளூர் ஊடகங்களில் அவரை தேடப்படும் குற்றவாளி என கூறி செய்திகள் வெளிவந்தன. இதனால் ஜேம்ஸ் பிரையன்ட் போலீசில் சரணடைய முடிவு செய்தார்.‌ வக்கீல் ஒருவரின் உதவியோடு அமைதியான முறையில் போலீசில் சரணடைவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இதையடுத்து தான் தங்கியிருந்த வனப்பகுதியிலிருந்து போலீஸ் நிலையம் செல்வதற்கு தனது சொந்த செலவில் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஹெலிகாப்டரில் அவர் போலீஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தலைமறைவாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘‘அந்த அனுபவம் நன்றாக இருந்தது. தினமும் யோகா செய்தேன்’’ என கூறினார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.

 http://Facebook page / easy 24 news
Previous Post

வாழைச்சேனை அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

Next Post

கொரோனா முடிஞ்சதும் நான் வந்துருவேன் – சசிகலா சர்ச்சைப் பேச்சு!

Next Post
சசிகலா குடும்பத்துக்கு புது நெருக்கடி- அதிமுக நிர்வாகிகள் வழக்கு!

கொரோனா முடிஞ்சதும் நான் வந்துருவேன் - சசிகலா சர்ச்சைப் பேச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures