அமெரிக்காவில் உள்ள, உலக புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலையில் நடக்கும், 15வது ஆண்டு இந்திய கருத்தரங்கில், மத்திய அமைச்சர், சுரேஷ் பிரபு, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், பிரபல நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
ஹார்வர்டு பல்கலையில், இந்திய கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன், 15வது ஆண்டு கருத்தரங்கு, பிப்., 10, 11ல் நடக்க உள்ளது.
இதில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான, சுரேஷ் பிரபு, காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், பிரபல நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் குறித்து, அவர்கள் உரையாற்ற உள்ளனர். பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பர்.
இது தவிர, கருத்தரங்கில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில், தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், கே.டி.ராமா ராவ், பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி., பூனம் மகாஜன், நடிகையும், காங்கிரசின் சமூக ஊடக பிரிவின் தலைவருமான, திவ்யா ஸ்பந்தனா, பிரபல தொழிலதிபர், நிதின் பராஞ்ச்பே ஆகியோரும் பேச உள்ளனர்.