Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஹாட்ரிக் அடிப்பாரா நடிகர் சூரி..?

July 26, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ஹாட்ரிக் அடிப்பாரா நடிகர் சூரி..?

நகைச்சுவை நடிகராக இருந்து ‘விடுதலை பார்ட் 1 ‘ படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்த நடிகர் சூரி நடிப்பில் வெளியாகும் ‘கொட்டுக்காளி’ எனும் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று அவருடைய திரையுலக பயணத்தில் ஹாட்ரிக் வெற்றியை வழங்குமா?  என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

‘கூழாங்கல்’ எனும் திரைப்படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த படைப்பாளி பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கொட்டுக்காளி ” எனும் திரைப்படத்தில் சூரி, அன்னா பென், மணிமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. சக்திவேல் ஒளி பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கணேஷ் சிவா படத் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பற்றி விருதுகளை வென்று வந்தது. மேலும் இந்த திரைப்படம் பட மாளிகையிவ் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.  இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சூரி கதையின் நாயகனாக நடித்து  வெளியான ‘விடுதலை பார்ட் 1’, ‘கருடன்’ என  இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று, அவருக்கு சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்திருக்கிறது. அவரது நடிப்பில் வெளியாகும் ‘கொட்டுக்காளி’ எனும் திரைப்படமும் வெற்றியைப் பெற்று ஹாட்ரிக் வெற்றியை தருவாரா..! என்ற எண்ணம் ரசிகர்களிடையேயும், வணிகர்களிடையேயும் ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

இம்மாதத்தின் முதல் 3 வாரங்களில் 127,925 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

Next Post

‘பேச்சி’ மூலம் கதையின் நாயகனான பால சரவணன்

Next Post
‘பேச்சி’ மூலம் கதையின் நாயகனான பால சரவணன்

'பேச்சி' மூலம் கதையின் நாயகனான பால சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures