ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இதன் பிறகும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த கட்சித் தலைமையகத்தின் மலசல கூடமாக்க வேண்டாம் என டிலான் பேரேரா எம்.பி. அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆர்ப்பாட்டம் செய்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது எனவும் அது சட்ட விரோதமானது எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்த கருத்துக் குறித்து பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.
தனக்கு வேண்டுமாயின் ஐ.தே.க.யுடன் அரசியல் பயணத்தைச் செல்லுமாறு நாம் துமிந்த திஸாநாயக்கவிடம் கேட்டுக் கொள்கின்றோம். தயவு செய்து ஸ்ரீ ல.சு.க.யை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் தலையிட வேண்டாம் எனவும் டிலான் பேரேரா மேலும் கேட்டுக் கொண்டார்.
