Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஸ்பீட் பிரேக் போட்ட கொரோனா

July 4, 2020
in Cinema
0

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் என எதுவுமே நடக்கவில்லை.. ஆனால் இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டும் தனது படங்களை ஒடிடியில் வெளியிடுவது, கொரோனா வைரஸ் என்கிற பெயரிலேயே படம் எடுத்து அதன் டிரைலரையும் வெளியிடுவது, ஊரடங்கு சமயத்திலேயே புதிய படங்களை அறிவிப்பது என பிஸியாகவே இருக்கிறார். சமீபத்தில் கூட அரைமணிநேரத்திற்கு குறைவாக ஓடக்கூடிய ஆபாசப்படம் ஒன்றை எடுத்து ஒடிடியில் வெளியிட்டு செமத்தியான லாபம் பார்த்தார்.

இவரது இத்தனை முயற்சிகளுக்கும் இவரிடமிருந்த தொழில்நுட்ப குழுவினர்தான் பக்கபலமாக இருந்தனர்.. கொரோனா தாக்கம் பற்றி கூட கவலைப்படாமல் ராம்கோபால் வர்மாவுக்காக வேலை பார்த்துவந்தனர். இந்த நிலையில் இந்த குழுவினரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ராம்கோபால் வர்மாவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும் மீதியுள்ள தொழில்நுட்ப குழுவினரும் கொரோனா அச்சம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதை விரும்பவில்லை.. இதனால் வேறு வழியின்றி தனது படப்பிடிப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டாராம் ராம்கோபால் வர்மா.

Previous Post

சீரியலுக்குள் நுழைந்த பிரம்மானந்தம்

Next Post

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சற்று முன்னர் கைது

Next Post

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சற்று முன்னர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures